நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் குடந்தை மண்ணில் இருந்து இந்த புதிய அரசு உங்களை என்னுடன் அறிமுக படுத்தி கொள்கிறேன். என் சார்ந்த கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். அதை உங்கள் மனம் உவந்து வரவேற்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன். தமிழுடன் விளையாட எனக்கு இந்த கணினியுகம் கொடுத்த மிக பெரிய வரம் இது. யாருக்கும் அஞ்சாமல், துணிவுடன், நேர்மையுடன் வலம் வர விரும்புகிறேன். செந்தமிழை செம்பொன் சிம்மாசனத்தில் அமர்த்த எனக்கு கிடைத்து இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி தமிழை வாழ்க! வளர்க! என்று என்றும் வாழ்த்துவேன்.